×

23 பவுன் நகைகள் மீட்பு விவசாயி தற்கொலை

 

ஈரோடு, ஜூலை 14: கோபி அடுத்துள்ள கங்கம்பாளையம், வண்ணாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). விவசாயியான இவரது மனைவி ஜங்கரத்தினம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபி அடுத்துள்ள குஞ்சரமடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற பொன்னுசாமி மீண்டும் திரும்பி வரும் போது குடிபோதையில் வந்துள்ளார்.

இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்ற கணவர் பொன்னுசாமி, அங்கு ஹாலில் கயிற்றால் தூக்கிட்டுக்கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 23 பவுன் நகைகள் மீட்பு விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Boun ,Erode ,Ponnusamy ,Kangambalayam ,Vangangadam ,Gobi ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு